1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐபிஎல் 2020
  4. Ruthuraj gaikwad talked about the advice given by dhoni

எந்த சூழ்நிலையையும் புன்னகையுடன் எதிர்கொள்ள வேண்டும் –கெய்க்வாட்டுக்கு தோனி சொன்ன அட்வைஸ்!

ருத்துராஜ் தோனி
சென்னை அணியின் புதிய நம்பிக்கை நட்சத்திரமாக உருவாகியுள்ள ருத்துராஜ் கெய்க்வாட் தனக்கு தோனி வழங்கிய அறிவுரை குறித்து பேசியுள்ளார்.

சிஎஸ்கே அணி இளம் வீரர்களுக்கு வாய்ப்புக் கொடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டை அடுத்து அவர்களிடம் ஸ்பார்க் இல்லை என தோனி கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இப்போது இளம் வீரர் ருத்துராஜ் கெய்க்வாட் அடுத்தடுத்து இரண்டு அரைசதங்களை அடித்து தன்னை நிருபித்துள்ளார். நேற்றைய போட்டியில் ஆட்டநாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.

இதையடுத்து அவர் பேசும் போது ‘எனக்கான வாய்ப்புகள் கிடைக்கும் போது அதை நான் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். இரண்டு போட்டிகளிலும் கடுமையான சூழலில் இறங்கி விளையாடினேன். எந்த சூழ்நிலைமையாக இருந்தாலும் அதை புன்னகையுடன் எதிர்கொள்ள வேண்டும் என்று எங்கள் கேப்டன் கூறுவார். அப்படி எதிர்கொள்வது கடினமே. ஆனாலும் அவ்வண்ணமே செய்ய முயற்சித்தேன்.’ எனக் கூறியுள்ளார்.

 
அடுத்த கட்டுரையில்
டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் செய்ய முடிவு!