தொடர்புடைய செய்திகள்
- 2வது நாளாகவும் பங்குச்சந்தை உயர்வு.. மீண்டும் காளையின் பிடியில் வருமா?
- சீனாவின் Deepseek AI நிறுவனத்தின் அபார வளர்ச்சி.. அமெரிக்க பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி..!
- நேற்றைய மோசமான சரிவுக்கு பின் இன்று பங்குச்சந்தை ஏற்றம்.. சென்செக்ஸ், நிஃப்டி நிலவரம்..!
- வாரத்தின் முதல் நாளே முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி.. பாதாளத்திற்கு செல்லும் பங்குச்சந்தை..!
- வாரத்தின் கடைசி தினத்தில் பங்குச்சந்தை ஏற்றம்.. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!
பங்குச்சந்தை 3வது நாளாக உயர்வு.. படிப்படியாக மீண்டு வருவதால் முதலீட்டாளர்கள் நிம்மதி..!
கடந்த வாரம் பங்குச்சந்தை மிக மோசமாக சரிந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக பங்குச்சந்தை மீண்டும் உயர்ந்து முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை அளித்துக் கொண்டிருக்கிறது.
இன்று மூன்றாவது நாளாகவும் பங்குச்சந்தை உயர்ந்துள்ளது, முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது. சற்றுமுன் பங்குச்சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில், மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 76,613 புள்ளிகள் உயர்ந்து வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 53 புள்ளிகள் உயர்ந்து 23,215 என்ற புள்ளிகளில் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.
இன்றைய பங்குச் சந்தையில் பஜாஜ் பைனான்ஸ், பிரிட்டானியா, பாரதி ஏர்டெல், ஹீரோ மோட்டார்ஸ், அப்போலோ ஹாஸ்பிடல், டாடா ஸ்டீல், கோடக் மகேந்திரா வங்கி, ஹிந்துஸ்தான் லீவர், ஆசியன் பெயிண்ட் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்துள்ளது.
மாறாக, எச்டிஎப்சி வங்கி, டிசிஎஸ், ஸ்டேட் வங்கி, ஐடிசி, ஆக்சிஸ் வங்கி, விப்ரோ, டைட்டான், ஐசிஐசிஐ வங்கி, இன்போசிஸ், டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட பங்குகள் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Edited by Siva
