தொடர்புடைய செய்திகள்
- வாரத்தின் முதல் நாளே முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி.. பாதாளத்திற்கு செல்லும் பங்குச்சந்தை..!
- பில்கேட்ஸ் - சந்திரபாபு நாயுடு சந்திப்பு.. ஆந்திராவில் ஏஐ மையம் நிறுவ முயற்சி..!
- நேற்றைய பயங்கர சரிவுக்கு பின் இன்று பங்குச்சந்தை நிலை என்ன? சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!
- நேற்று ஏற்றத்தில் இருந்த பங்குச்சந்தை இன்று மீண்டும் சரிவு.. முதலீட்டாளர்கள் அதிருப்தி..!
- இன்று ஒரே நாளில் 400 ரூபாய் உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
நேற்றைய மோசமான சரிவுக்கு பின் இன்று பங்குச்சந்தை ஏற்றம்.. சென்செக்ஸ், நிஃப்டி நிலவரம்..!
பங்குச்சந்தை நேற்றைய மிக மோசமான சரிவால் முதலீட்டாளர்கள் பெரும் நஷ்டம் அடைந்த நிலையில் இன்று பங்குச்சந்தை மீண்டும் உயர்ந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு திருப்தியை அளித்துள்ளது/
இன்று காலை பங்குச்சந்தை ஆரம்பம் முதலில் ஏற்றத்தில் இருந்த நிலையில் சற்று முன் மும்பை பங்குச்சந்தை சன் செக்ஸ் 720 புள்ளிகள் உயர்ந்து 76 ஆயிரத்து 85 என்ற பள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
அதே போல் மும்பை தேசிய பங்கு சந்தை நிஃப்டி 173 புள்ளிகள் உயர்ந்து 23,003 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
இன்றைய பங்கு சந்தையில் ஆக்சிஸ் வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி, பஜாஜ் பைனான்ஸ், ஐசிஐசிஐ வங்கி, ஸ்ரீராம் பைனான்ஸ், டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ், இன்ஃபோசிஸ், பாரதி ஏர்டெல் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்துள்ளது.
அதேபோல் மாருதி, டிசிஎஸ், ஐடிசி, சிப்லா, விப்ரோ, பிரிட்டானியா, சன் பார்மா உள்ளிட்ட பங்குகள் குறைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன
Edited by Siva
