1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
  4. Aircel to be closed refused

ஏர்செல் தமிழகத்தில் இருக்கும், வதந்திகளை நம்ப வேண்டாம்; குறுந்தகவலில் விளக்கம்!!

ஏர்செல்
கடன் நெருக்கடி காரணமாக ஏர்செல் நிறுவனம் மூடப்படவுள்ளதாக தகவல்கள் வெளியானது.  


 
 
அனில் அம்பானியில் ஆர்காம் நிறுவனத்துடன் ஏர்செல் நிறுவனம் இணைப்பு திட்டம் சில காரணங்களால் பின்வாங்கப்பட்டது. 
 
இந்நிலையில், ஆர்காம் நிறுவனம் வாய்ஸ் கால் சேவையை நிறுத்த முடிவு செய்தது. இதனையடுத்து ஏர்செல் நிறுவனம் மூட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது.  
 
இதற்கு ஏர்செல் நிறுவனம் மறுப்பு தெரிவித்து தனது வாடிக்கையாளர்களுக்கு குறுந்தகவல்கள் அனுப்பி வருகிறது. 
 
அந்த குறுந்தகவலில், “ஏர்செல் தமிழகத்தில் இருக்கும். மக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம். தங்களின் தொடர் ஆதரவுக்கு நன்றி” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
வருமான வரித்துறை சோதனைக்கு தகவல் கொடுத்த ஓபிஎஸ்-ஈபிஎஸ்!