1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடும் நடப்பும்
Written By Sinoj
Last Updated : சனி, 20 நவம்பர் 2021 (17:01 IST)

பாலியல் புகார்- பிரபல கல்லூரிக்கு சீல்!

திண்டுக்கல் மாவட்டத்தில் பாலியல் புகாரை அடுத்து  பிரபல கல்லூரிக்கு இன்று சீல் வைக்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் முத்தனம்பட்டி அருகேயுள்ள சரபி கல்லூரிக்கு தற்காலிகமாக சீல் வைக்கப்பட்டுள்ளது.

இக்கல்லூரி தாளாளர் ஜோதி முருகன் மீதான பாலியல் புகாரை அடுத்து திண்டுக்கல் சரக டிஐஜி விஜயகுமார் தலைமையிலான குழு நடவடிக்கை எடுத்துள்ளது.  இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.