தொடர்புடைய செய்திகள்
- ’கொட்டாவி விடுவதெல்லாம் சாதாரண விஷயம்’…..ரசிகர்களுக்கு பதிலளித்த பாகிஸ்தான் கேப்டன்
- சச்சினுக்கும், இம்ரான் கானுக்கும் வித்தியாசம் தெரியாதா? – பாகிஸ்தான் உதவியாளரை குதறி எடுத்த நெட்டிசன்ஸ்
- தென்னாப்பிரிக்காவுக்கு 5வது தோல்வி: 49 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி!
- மீண்டும் ஒரு 300 பிளஸ் டார்கெட்: உலகக்கோப்பையில் ரன்மழை
- ஒரு பிரதமரா இருந்துட்டு இப்படி பண்ணலாமா?...இம்ரான் கானை கிண்டல் அடிக்கும் நெட்டிசன்கள்
கோலிதான் உங்கள் ஆதர்சம் என்றால் ? – பாபர் ஆசாத்துக்கு அக்தர் அறிவுரை !
பாகிஸ்தான் இளம் வீரரான பாபர் ஆசாத்துக்கு பாக். முன்னாள் பந்துவீச்சாளர் சோயிப் அக்தர் அறிவுரை ஒன்றை வழங்கியுள்ளார்.
தென் ஆப்பிரிக்கா அணியோடு நேற்று நடந்த போட்டியில் பாக். அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்துள்ளது. இதில் அந்த அணியின் இளம்வீரரான பாபர் ஆசாத் அடித்த 69 ரன்கள் முக்கியப் பங்காற்றின. இவர் இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லிதான் தன்னுடைய ஆதர்சம் எனப் பலமுறைக் கூறியுள்ளார்.
இதையடுத்து பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் அக்தர், பாபர் ஆசத்துக்கு ஒரு வீடியோ மூலம் அறிவுரை ஒன்றை வழங்கியுள்ளார். அதில் ‘ உங்களுக்கு வீராட் கோலிதான் நாயகன் என்றால், நீங்கள் அவரைப் போல விளையாட வேண்டும். விராட் கோலி போல சிங்கிள்ஸ் மற்றும் டபுள்ஸ் ஓடக் கற்றுக்கொள்ள வேண்டும். விராட் கோலி உள்ளிட்ட தலைசிறந்த வீரர்கள் 50 ரன்களுக்குப் பிறகு வேகமாக ரன் குவிப்பார்கள். அதுப்போல அதிகமான ஷாட்களை அடிக்க வேண்டும்’ எனக் கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்