1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Young student tapasya died after cricket ball hitting

கேரளாவில் கிரிக்கெட் பந்து தாக்கியதில் பள்ளி மாணவி மரணம்…!

தபஸ்யா
இந்தியாவைப் பொறுத்தவரை மற்ற அனைத்து விளையாட்டுகளையும் விட முன்னணியில் இருப்பது கிரிக்கெட்தான். சமீபகாலாக ஆண்களுக்கு நிகராக பெண்களும் இந்த கிரிக்கெட் விளையாட்டில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அந்த வகையில் பல இளம்பெண்கள் கிரிக்கெட்டை விளையாட்டை தொழில்முறையாக எடுத்து செல்ல ஆர்வம் காட்டுகின்றனர். இந்நிலையில் கேரளாவில் பள்ளியில் கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபட்டிருந்த தபஸ்யா என்ற மாணவி பந்து தாக்கியதில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

தபஸ்யா பள்ளியில் சக மாணவிகளோடு பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.அப்போது அவர் பேட் செய்ய தயாரவதற்கு முன்பாகவே பந்துவீசப்பட, அதை அவர் எதிர்கொள்ள முடியாமல் தலையில் பந்து பட்டு மைதானத்திலேயே நிலைகுலைந்து விழுந்துள்ளார். அப்போது அவர் ஹெல்மெட் அணிந்திருக்கவில்லை என சொல்லப்படுகிறது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 3 நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு தற்போது உயிரிழந்துள்ளார்.
About Writer
vinoth
அடுத்த கட்டுரையில்
காதலுக்காக போலீஸ் வேடமணிந்த பெண்… சிக்கிய சுவாரஸ்ய பின்னணி!