1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Wtc final india struggling in final

பவுலிங்கில் சொதப்பிய மாதிரி பேட்டிங்கிலும் சொதப்பிய இந்தியா… இரண்டாம் நாளில் ஆதிக்கம் செலுத்திய ஆஸி!

ரஹானே
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேஎ நடைபெற்று வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவின் கை ஓங்கியுள்ளது.

முதல் இன்னிங்ஸில் ஆஸி அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 469 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டிராவிஸ் ஹெட் அபாரமாக சதமடித்து அணியை வலுவான ஸ்கோர் நோக்கி அழைத்துச் சென்றனர்.

இதையடுத்து இந்திய அணி முதல் இன்னிங்ஸ் பேட்டிங்கை தொடங்கி ஆடியது. இதில் முனவரிசை பேட்ஸ்மேன்களான கில், ரோஹித் ஷர்மா, கோலி, புஜாரா ஆகியோர் குறைந்த ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினர். இதையடுத்து ஆடிய ரஹானேவும், ஜடேஜாவும் கூட்டணி அமைத்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். 48 ரன்கள் சேர்த்து ஜடேஜா அவுட் ஆனார்.

நேற்று ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட்களை இழந்து 151 ரன்கள் சேர்த்துள்ளது. ரஹானே ஆட்டமிழக்காமல் 29 ரன்கள் சேர்த்து களத்தில் உள்ளார்.
About Writer
vinoth
அடுத்த கட்டுரையில்
தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடங்கும் தேதி அறிவிப்பு.. 8 அணிகள் பங்கேற்பு..!