தொடர்புடைய செய்திகள்
- ஒரே நாளில் 2,678 பேர் பாதிப்பு; 10 பேர் பலி! – இந்தியாவில் கொரோனா நிலவரம்!
- 62.89 கோடியை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு!
- டி-20 பயிற்சி போட்டி கிரிக்கெட்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி தோல்வி!
- உக்ரைனின் கிவி நகர் மீது மீண்டும் ரஷியா தாக்குதல் !
- உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி : திரையரங்குகளில் நேரடி ஒளிபரப்பு
“இந்த மூன்று அணிகள்தான் அரையிறுதிக்கு முன்னேறும்…” பாக் வீரரின் கணிப்பு!
இன்னும் சில நாட்களில் டி 20 உலகக்கோப்பை தொடர் தொடங்க உள்ளது. இதற்காக உலகெங்கும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
உலகக்கோப்பைக்காக அணிகள் தயாராகி வரும் நிலையில் முன்னாள் வீரர்கள் மற்றும் வர்ணனையாளர்களின் அணிகளின் செயல்பாடு மற்றும் கோப்பையை வெல்லும் வாய்ப்பு ஆகியவை பற்றி கணித்து கூறி வருகின்றனர்.
அந்தவகையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனும், உலகின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவருமான வாசிம் அக்ரம் அரையிறுதிக்கு செல்லும் மூன்று அணிகள் என இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகளைக் குறிப்பிட்டுள்ளார். மேலும் நான்காவது அணியாக தென்னாப்பிரிக்கா செல்ல வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளார்.