1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 13 அக்டோபர் 2022 (20:48 IST)

உக்ரைனின் கிவி நகர் மீது மீண்டும் ரஷியா தாக்குதல் !

உக்ரைன்  நாட்டின் மீது உலகப் பெரும் வல்லரசான ரஷியா தொடர்ந்து போரிட்டு வருகிறது. ஏழரை மாதத்திற்கு மேலாக இப்போர் நடந்து வரும் நிலையில், சமீபத்தில், உக்ரைனில் சில பகுதிகளை தங்கள் பிராந்தியத்துடன் ரஷ்யா இணைத்துக்கொண்டது.

இதற்கு  ஐ நா கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், இதற்கான தீர்மானம்   ஒன்று ஐ நாவில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு ஆதரவாக 143 நாடுகள் வாக்களித்துள்ளன. இந்தியா உள்ளிட்ட 35 நாடுகள் இந்த வாக்கெடுப்பை புறக்கணித்துள்ளன.

இந்த நிலையில், உக்ரைன் தலை நகர் கிவ்வில் கடந்த 10 ஆம் தேதி ரஷிய ராணுவம் ஒரு நாளில் சுமார் 84 ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில், அப்பாவி மக்களும் பலியாகினர்.
இதற்குப் பதிலடியாக ரஷியாவிடம் உள்ளா கிரீபியா என்ற பகுதியில் உள்ள பாலத்தின் குண்டுவெடிப்பு நிகழ்த்தியது. இதனால், இன்று ரஷியா, உக்ரைனில் கிவ் நகர் மீது மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளது.

அங்குள்ள மக்கள், வேறு பாதுகாப்பான பகுதிக்கு குடிபெயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

Edited by Sinoj