வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By sinoj
Last Updated : திங்கள், 20 செப்டம்பர் 2021 (16:53 IST)

கிரிக்கெட் வீரர்களுக்கு ஊதிய உயர்வு!

23 வயதிற்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியில் விளையாடும் வீரர்களுக்கான ஊதியம் உயர்த்தபட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.

கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ, உள்நாட்டில் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கும் விளையாட்டு வீரர்களுக்கான ஊதியத்தை உயர்த்துவதாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து, பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா கூறியுள்ளதாவது:

உள்நாட்டில் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கும் மூத்த வீரர்களுக்கான ஊதியம் ரூ.60,000 உயர்த்தப்பட உள்ளது. 23 வயதிற்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு ரூ.25000 ;  19 வயதிற்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு ரூ.20000 ஊதியம் என தெரிவித்துள்ளார்.

இந்த ஊதிய உயர்வு   உள்ளாட்டுக் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.