1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 23 ஜூன் 2021 (15:43 IST)

என்ன கேப்டன் இப்படி பண்றீங்க? இரண்டாவது இன்னிங்ஸிலும் ஏமாற்றிய கோலி!

இந்தியா – நியூஸிலாந்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸிலும் கேப்டன் விராட் கோலி குறைந்த ரன்களில் அவுட் ஆனது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ட்ராபிக்கான இறுதி போட்டியில் இந்தியா – நியூஸிலாந்து அணிகள் பலப்பரீட்சை செய்து வருகின்றன. கடந்த 5 நாட்களாக முதல் இன்னிங்ஸ் நடந்து வந்த நிலையில் இந்தியா 217 ரன்களும், நியூஸிலாந்து 249 ரன்களும் பெற்றுள்ளன.

இந்நிலையில் இன்று தொடங்கியுள்ள இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா பேட்டிங் செய்து வரும் நிலையில் சுப்மன் கில் முதலாவதாக 8 ரன்களில் அவுட் ஆனார். தொடர்ந்து ரோகித் ஷர்மா 30 ரன்களில் அவுட் ஆன நிலையில் கோலி முதல் இன்னிங்ஸிற்கும் சேர்த்து இந்த ஆட்டத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 13 ரன்களே எடுத்து கோலியும் விக்கெட்டை இழந்துள்ளார். 4 விக்கெட் இழப்பிற்கு 77 ரன்கள் என இந்தியாவின் நிலவரம் உள்ளது.