1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : புதன், 10 மார்ச் 2021 (15:58 IST)

யோயோ சோதனையில் தோற்ற தமிழக வீரர்… அதிர்ச்சியில் ரசிகர்கள்!

தமிழகத்தைச் சேர்ந்த வருண் சக்கரவர்த்தி யோயோ சோதனையில் தோல்வி அடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு தற்போது டெஸ்ட் தொடரை விளையாடி முடித்துள்ளது. அடுத்ததாக மார்ச் 12 ஆம் தேதி டி 20 போட்டி அகமதாபாத்தில் உள்ள பிரதமர் நரேந்திர மோடி மைதானத்தில் நடக்க உள்ளது.இதற்கான இந்திய அணி சில நாட்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன், வருண் சக்கரவர்த்தி மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியவர்கள் இடம்பெற்றிருந்தனர்.

இந்நிலையில் வீரர்களைத் தேர்வு செய்யும் யோயோ தேர்வில் வருண் சக்கரவர்த்தி தோல்வி அடைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் அவர் டி 20 போட்டிகளில் விளையாடுவது கேள்விக்குறியாகியுள்ளது.