தொடர்புடைய செய்திகள்
- ஃபர்ஸ்ட் பம்முவோம்; ரெண்டாவதா வந்து கும்முவோம்! – ஜாம்பவான்களை தோற்கடித்த கிங்ஸ் லெவன்
- சாம் கரணும் ஜடேஜாவும் போதும்… மற்றவர்களை வீட்டுக்கு அனுப்புங்க – சமூகவலைதளங்களில் எழுந்த குரல்!
- இத்தனை வருடமாக உங்களை எப்படி வச்சு செஞ்சதுன்னு புரியுது – வெங்கட் பிரபுவின் டிவீட்!
- தினேஷ் கார்த்திக்கை கேப்டன் பதவியில் இருந்து தூக்கியது தவறு – முன்னாள் வீரர் கண்டனம்!
- சிஎஸ்கே ஜெயிக்கணும்னா இதுமட்டும்தான் ஒரே வாய்ப்பு! – ரசிகர்கள் புலம்பல்ஸ்!
சிஎஸ்கேவுக்கு மற்றுமொரு இழப்பு: சொந்த ஊர் கிளம்பினார் ப்ராவோ!
நடப்பு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோசமான தோல்விகளை சந்தித்து வரும் நிலையில் அணியின் முண்ணனி பந்துவீச்சாளர் ப்ராவோ விலகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் நிலையில் இதுவரையிலான ஆட்டங்களில் சிஎஸ்கே அணி அதிக தோல்விகளை சந்தித்து தர வரிசையில் இறுதி இடத்தை பிடித்துள்ளது. இந்நிலையில் அணியின் முக்கிய பந்து வீச்சாளரான ட்வெய்ன் ப்ராவோ அணியிலிருந்து விலகுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
டெல்லி அணிக்கு எதிராக விளையாடியபோது ப்ராவோவிற்கு காயம் ஏற்பட்டது. காயம் குணமாகாத காரணத்தால் ப்ராவோ தனது சொந்த நாடான வெஸ்ட் இண்டீஸுக்கு திரும்புகிறார். இதனால் இனி வரும் ஐபிஎல் போட்டிகளில் ப்ராவோ இருக்க மாட்டார் என சிஎஸ்கே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே போதிய அளவு பலம் வாய்ந்த வீரர்கள் இல்லாத சூழலில் ப்ராவோவின் இழப்பு சிஎஸ்கேவை பலவீனப்படுத்தும் என்று ரசிகர்கள் கவலையில் உள்ளனர்.
அடுத்த கட்டுரையில்