வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 20 நவம்பர் 2021 (19:32 IST)

’’எனது கடைசி டி-20 தமிழ்நாட்டில் தான் ’’- தோனி உருக்கம்

தமிழ்நாடு எனக்கு நிறைய கற்றுக் கொடுத்துள்ளது என தோனி  தெரிவித்துள்ளார்.

இன்று சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடப்பு ஐபிஎல் தொடரில் கோப்பை கைப்பற்றிய தோனி தலைமையிலான சென்னை அணிக்கு பாராட்டு விழா நடைபெற்று வருகிறது.

இதில் பேசிய சென்னை கிங்ஸ் அணி கேப்டன் தோனி அடுத்த 5 வருடமோ, 5 ஆண்டுகளுக்குப் பிறகோ எனது கடைசி டி-20 போட்டி சென்னையில் தான் நடக்கும் எனத் தெரிவித்தார். மேலும் தமிழ்நாடு என்க்கு நிறைய கற்றுக் கொடுத்துள்ளது.வெற்றியைக் காட்டிலும் தோல்வியில் நாங்கள் நிறைய கற்றுக் கொண்டோம்  எனத் தெரிவித்துள்ளார்.