1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Updated : திங்கள், 5 ஏப்ரல் 2021 (18:53 IST)

ஐபிஎல் வீரர்களை பாதுகாக்க இதுதான் ஒரே வழி....ராஜூவ் சுக்லா தகவல்

ஐபிஎல் 2021 14 வது சீசன் வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி தொடங்குகிறது. வரும் 10 ஆம் தேதி சென்னை அணி டெல்லி அணியுடன் முதல் போட்டியில் விளையாடவுள்ளது.

இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் மும்பை வான்கடே மைதானத்தைச் சேர்ந்த ஊழியர்கள் சிலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஐபிஎல் 2021 14 வது சீசன் வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி தொடங்குகிறது. வரும் 10 ஆம் தேதி சென்னை அணி டெல்லி அணியுடன் முதல் போட்டியில் விளையாடவுள்ளது.

இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் மும்பை வான்கடே மைதானத்தைச் சேர்ந்த ஊழியர்கள் சிலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கொரோனாவிலிருந்து தப்பிக்க ஐபிஎல் வீரர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதுதான் வீரர்களைப் பாதுக்காக்க ஒரே வழி என கிரிக்கெட் வாரிய துணைத்தலைவர் ராஜூவ் சுக்லா தெரிவித்துள்ளார்.

மேலும் இதுகுறித்து அவர் கூறியதாவது:

இந்தக் கொரோனா வைரஸ் எப்போது முடிவுக்கு வரும் என எவருக்கும் தெரியாது; இந்தக் கொரோனா தொற்று இருக்கும்வரை வீரர்கள் சிறப்பாக விளையாட முடியாது. எனவே அனைத்து வீரர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும். மேலும் மத்திய சுகாதார அமைச்சகத்துடன் இதுகுறித்துக் கலந்துபேசி உரிய முடிவு எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.