1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Updated : வியாழன், 24 பிப்ரவரி 2022 (22:02 IST)

T-20 போட்டி: இலங்கை அணிக்கு 200 ரன்கள் வெற்றி இலக்கு

இலங்கைக்கு  எதிரான 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் இன்று முதல் போட்டி  இரவு ஏழுமணிக்கு தொடங்கியுள்ளது.

இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில், கிஷன் 30 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தியதுடன், 56 பந்துகளில் 89 ரன்கள் அடித்தார்.

ரோஹித்சர்மா, 32 பந்துகளுக்கு 44 ரன்கள் அடித்தார். ஸ்ரேயாஸ் அய்யர் 57 ரன்களும், ஜடேஜா 3  ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

எனவே இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் அடித்து, இலங்கைக்கு 200  ரன்கள் இலக்கா  நிர்ணயித்துள்ளது.