1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 24 பிப்ரவரி 2022 (21:10 IST)

ரஷ்யா- உக்ரைன் போரால் கச்சா எண்ணெய்யின் விலை உயர்வு

உக்ரைன் போரால் கச்சா எண்ணெய்யின் விலை வரலாறு காணாத அளவில் அதிகரித்துள்ளது.

தற்போது, அமெரிக்க டாலருக்கு   நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு  கடுமையான சரிவடைந்துள்ளது.

டாலருக்கு நிகரான இந்திய  ரூபாயின் மதிப்பு 109 காசுகள் சரிந்து ரூ.75.70 ஆக குறைந்துள்ளது. இப்போரால் வரும் நாட்களில் அத்திவாசியப் பொருகளின் விலை கடுமையாக உயரலாம் என தகவல் வெளியாகிறது.

மேலும் ,  100 டாலரை தாண்டி கச்சா எண்ணெய் உயர்ந்துள்ளது. சர்வதேச சந்தையில்  பிரென்ட் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் இன்றுக்கு 105 .34 டாலராக அதிகரித்துள்ளது.

ரஷ்யா, உக்ரைன் மீது தொடுத்துள்ள போரினால் கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 100 டாலருக்கு மேல் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதால் உலக  நாடுகள் அதிர்ச்சி அடைந்துள்ளன. இதனால் உலக  நாடுகளில் பெட்ரோல்- டீசல் விலை லிட்டருக்கு 7 முதல் 8 ரூபாய் வரை அதிகரிக்க வாய்ப்புய்ள்ளதாகவும் கூறப்படுகிறது.               

துருக்கி நாடு உக்ரைனுக்கு ஆதரவு அளித்து, ரஷ்யாவின் அ நீதியான போர் எனக் குறிப்பிட்டுள்ளது. ஜெர்மன்  ,பிரான்ஸ் நாடுகள் ரஷ்யாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அதேபோல்  அமெரிக்கா நாடு, ரஸ்யா பின்விளைவுகளைச் சந்திக்கும் என எச்சரித்துள்ளது.