1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Sanjay goenka and Rishab pant trolls started

தோல்விக்குக் காரணமான ரிஷப் பண்ட்டின் தவறு.. சஞ்சய் கோயங்காவின் லுக்.. நெட்டிசன்கள் அமலி!

Cricket
ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில், லக்னோ மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றது. இதில், லக்னோ அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் மிட்சல் மார்ஷ் மற்றும் நிக்கோலஸ் பூரன் இருவரும் அபாரமாக விளையாடி, தலா 72 மற்றும் 75 ரன்கள் எடுத்தனர்.

இதனை அடுத்து, 210 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய டெல்லி அணி ஆரம்பத்திலேயே முக்கிய விக்கெட்டுகளை இழந்தது. இருப்பினும், இம்பேக்ட் பிளேயராக வந்த அஷுடோஷ் சர்மா அபாரமாக விளையாடி 62 ரன்கள் சேர்த்து போட்டியை லக்னோ அணியிடம் இருந்து தட்டிப் பறித்தார்.

இந்த போட்டியின் இறுதி ஓவரில் 6 பந்துகளுக்கு 6 ரன்கள் தேவைப்பட மோஹித் ஷர்மாவின் ஸ்டம்பிங் ஒன்றை ரிஷப் பண்ட் மிஸ் செய்தார். அதை அவர் சரியாக செய்திருந்தால் போட்டியை டெல்லி வென்றிருக்கும். ரிஷப் பண்ட் அந்த ஸ்டம்பிங்கை மிஸ் செய்ததை கேலரியில் இருந்த அணி உரிமையாளர் சஞ்சய் கோயங்கா முறைத்தபடி பார்த்துக்கொண்டிருந்தார். இதை வைத்து தற்போது நெட்டிசன்கள் அவரை ட்ரோல் செய்தபடி மீம்ஸ்களைப் பகிரத் தொடங்கியுள்ளன.
About Writer
vinoth
அடுத்த கட்டுரையில்
இந்த பெருமையெல்லாம் என் குருநாதருக்குதான்! ஷிகார் தவானுக்கு வீடியோ கால் போட்ட அஷுதோஷ்!