தொடர்புடைய செய்திகள்
- ஒரே நாளில் மூன்று வடிவிலான போட்டிகளிலும் விளையாட இந்தியாவால் மட்டும்தான் முடியும்- ஆஸி வீரர் பாராட்டு!
- நம்மிடம் இருப்பதே ஒரே ஒரு ஸ்டார்… ஏன் இப்படி பண்றீங்க? – பாக். முன்னாள் வீரர் ஆதங்கம்!
- சாம்பியன்ஸ் கோப்பை சிறந்த அணியில் ரோஹித் ஷர்மாவைப் புறக்கணித்த அஸ்வின்… ரசிகர்கள் அதிருப்தி!
- டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு இவர்தான் கேப்டன்… வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
- பாகிஸ்தானுக்கு ஐசிசி கண்ணாடியைக் காண்பித்துள்ளது… முன்னாள் வீரர் காட்டம்!
சில நேரம் நான் என் வீரர்களைத் திட்டிவிடுவேன்… நாங்க சகோதரர்கள் –கேப்டன் ரோஹித் ஷர்மா கருத்து!
நடந்து முடிந்த சாம்பியன்ஸ் கோப்பை தொடரை வென்று இந்திய அணி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இந்த தொடர் முழுவதும் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் இறுதிப் போட்டியில் அரைசதம் அடித்து ஆட்டநாயகன் விருதையும் வென்றார் கேப்டன் ரோஹித் ஷர்மா.
இந்த தொடர்தான் கேப்டனாக ரோஹித் ஷர்மாவின் கடைசித் தொடராக இருக்கும் என்றெல்லாம் தகவல்கள் பரவின. தற்போது 37 வயதாகும் அவர் எப்படியும் அடுத்து வரும் 50 ஓவர் உலகக் கோப்பையில் விளையாட மாட்டார். அதனால் இப்போதிருந்தே புதியக் கேப்டனை தயார்படுத்துவதற்காக இந்த முடிவு எடுக்கப்படும் என சொல்லப்பட்டது. ஆனால் தற்போதைக்கு தான் ஒரு நாள் போட்டிகளில் ஓய்வு பெறப் போவதில்லை என்று அறிவித்தார்.
இந்நிலையில் ரோஹித் ஷர்மா களத்தில் கோபப் படுவது குறித்து பேசியுள்ளார். அதில் “நான் மைதானத்தில் அதிகமாக உணர்ச்சிப்படுவேன். அதனால் சில நேரம் சக வீரர்களைத் திட்டிவிடுவேன். ஆனால் அது அவர்களைப் புண்படுத்துவதற்காக அல்ல. நாங்கள் எல்லோரும் சகோதரர்கள்தான். இந்திய அணி ஒரு குடும்பம் போன்றது” என நெகிழ்ச்சியாகப் பேசியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்