தொடர்புடைய செய்திகள்
- சாம்பியன்ஸ் கோப்பை சிறந்த அணியில் ரோஹித் ஷர்மாவைப் புறக்கணித்த அஸ்வின்… ரசிகர்கள் அதிருப்தி!
- ஹோலி வண்ணங்களை எதிர்ப்பவர்கள் இந்தியாவை விட்டு வெளியேறலாம்: உ.பி. அமைச்சர் சர்ச்சை கருத்து
- பாகிஸ்தானுக்கு ஐசிசி கண்ணாடியைக் காண்பித்துள்ளது… முன்னாள் வீரர் காட்டம்!
- இந்தியா வந்த இங்கிலாந்து பெண் வன்கொடுமை! இன்ஸ்டா நண்பன் கைது!
- பங்குச்சந்தை இன்று ஏற்றம் தான்.. ஆனால் மதியத்திற்கு பின் ஏமாற்றுமா?
ஒரே நாளில் மூன்று வடிவிலான போட்டிகளிலும் விளையாட இந்தியாவால் மட்டும்தான் முடியும்- ஆஸி வீரர் பாராட்டு!
நடந்து முடிந்த சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்திய அணி தோல்வியேக் காணாமல் வெற்றி பெற்றது. இதன் மூலம் மூன்றாவது முறையாக சாம்பியன்ஸ் கோப்பையைக் கைபற்றி அதிக முறை கோப்பை வென்ற அணி என்ற பெருமையைப் பெற்றுள்ளது.
இந்த தொடரில் இந்திய அணியில் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர்,கே எல் ராகுல், வருண் சக்ரவர்த்தி, ஷமி என எனப் பலரும் சிறப்பாக பங்காற்றினார். கடைசி போட்டியில் ரோஹித் ஷர்மா சிறப்பாக அடி அரைசதம் அடித்து ஆட்டநாயகன் விருதைப் பெற்றார். இதனால் இந்த தொடர் வெற்றி இந்திய அணியின் கூட்டு பங்களிப்பின் வெற்றியாகவேக் கருதப்படுகிறது. இந்த தொடரை இந்திய அணி வென்றாலும் ஒரே மைதானத்தில் விளையாடியது அனுகூலமாக அமைந்தது என விமர்சனங்களும் எழுந்தன.
இந்நிலையில் ஆஸி அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் இந்திய அணி பற்றி பாராட்டி பேசியுள்ளார். அதில் “ஒரே நாளில் இந்திய அணியால் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி 20 போட்டிகளில் வேறு வேறு வீரர்களைக் கொண்ட அணியை உருவாக்க முடியும். அந்த அணிகள் எதிரணிகளுக்குக் கடுமையான சவாலை அளிக்க முடியும்” எனக் கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்