1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : செவ்வாய், 20 டிசம்பர் 2022 (10:26 IST)

இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் ரோஹித் ஷர்மா இல்லை – லேட்டஸ்ட் தகவல்

இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டியில் காடம் காரணமாக கேப்டன் ரோஹித் ஷர்மா காயம் காரணமாக விலகியுள்ளதால், கே எல் ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவர் 22 ஆம் தேதி தொடங்கும் டாக்கா போட்டியிலாவது விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அவர் கைவிரலில் ஏற்பட்ட காயம் இன்னும் முழுமையாக குணமடையவில்லை என சொல்லப்படுகிறது. மேலும் அவர் இன்னும் இந்தியாவில் தான் இருக்கிறார் என்பதால் அவர் கண்டிப்பாக இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாட வாய்ப்பில்லை என்று சமீபத்தைய தகவல்கள் வெளியாகியுள்ளன.