தொடர்புடைய செய்திகள்
- 10 வருடகால சவால்… ரோஹித் ஷர்மாவைப் பெருமைபடுத்திய சி எஸ் கே அணி!
- ரோஹித் சர்மாவின் கேப்டன் பதவி பறிப்பு.... குறைந்து வரும் ஃபாலோயர்களின் எண்ணிக்கை
- ஐபிஎல் வரலாற்றில் மிகச்சிறந்த கேப்டன் ரோஹித் சர்மா- மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம்
- மும்பை இந்தியன்ஸ் அணிக்கு புதிய கேப்டன் நியமனம்!
- 10 ஓவர்கள் கொண்ட T10 தொடரை அறிமுகப்படுத்த பிசிசிஐ திட்டம்?
ரோஹித் ஷர்மாவை இம்பேக்ட் பிளேயராக இறக்க மும்பை இந்தியன்ஸ் அணி திட்டமா?
கடந்த சில வாரங்களாக ஐபிஎல் பற்றிய பேச்சுகள் அதிகளவில் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளன. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஹர்திக் பாண்ட்யா மீண்டும் வாங்கப்பட்டதால் அவர் கேப்டனாக நியமிக்கப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
எதிர்பார்த்தது போலவே நேற்று மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா அறிவிக்கப்பட்டார். முன்னாள் கேப்டன் ரோஹித் ஷர்மாவுக்கு நன்றி தெரிவித்து ஒரு வீடியோவையும் வெளியிட்டது மும்பை இந்தியன்ஸ் அணி.
மும்பை அணிக்காக 5 முறை கோப்பை வென்று கொடுத்துள்ள ரோஹித் ஷர்மாவை மரியாதை இல்லாமல் மும்பை இந்தியன்ஸ் நடத்துவதாக ரசிகர்கள் கொந்தளித்தனர். இந்நிலையில் இந்த அறிவிப்பு வெளியான உடனே மும்பை இந்தியன்ஸ் அணியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை ரசிகர்கள் அன்பாலோ செய்ய ஆரம்பித்துள்ளனர். மளமளவென பாலோயர்களின் எண்ணிக்கைக் குறைய ஆரம்பித்துள்ளது.
இந்நிலையில் அடுத்த ஆண்டு நடக்க உள்ள ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோஹித் ஷர்மாவை வெறும் இம்பேக்ட் ப்ளேயராக மட்டும் பயன்படுத்த திட்டமிட்டு வருவதாக சொல்லப்படுகிறது.