தொடர்புடைய செய்திகள்
- கோலியின் விக்கெட் சிறந்த பந்து அல்ல- ஆஸி கிரிக்கெட் வீரர் டாட் மர்ஃபி மகிழ்ச்சி
- இந்தியா vs ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டி: ரோஹித் ஷர்மா சதம் அடித்து இந்திய அணியை மீட்ட தருணம்
- ''பசு அரவணைப்பு தினம்'' வாபஸ் -விலங்கு நல வாரியம் அறிவிப்பு!
- இந்தியா ஆஸ்திரேலியா டெஸ்ட்: அக்சர் பட்டேல், ஜடேஜாவின் அரைசதத்துடன் முடிந்த 2வது நாள் ஆட்டம்!
- திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடக்கும் முறைகேடுகளைத் தவிர்க்க புதிய திட்டம் !
இந்திய கேப்டன்களில் இந்த சாதனையைப் படைத்தது ரோஹித் ஷர்மா மட்டும்தான்!
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா நேற்று டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக தன்னுடைய முதல் சதத்தைப் பதிவு செய்தார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நேற்று தொடங்கிய நிலையில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணியை 177 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதையடுத்து ஆடிய இந்திய அணி தற்போது வரை 7 விக்கெட் இழப்புக்கு 321 ரன்கள் சேர்த்துள்ளது.
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா நேற்று சதமடித்து அணியை நல்ல ஸ்கோருக்கு அழைத்து செல்ல உதவினார். டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக பொறுப்பேற்ற பின்னர் ரோஹித் அடித்த முதல் சதம் இதுவாகும்.
மேலும் அவர் மற்றொரு சாதனையையும் படைத்துள்ளார். டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி 20 போட்டி என மூன்று வடிவிலும் கேப்டனாக சதமடித்த இந்திய கேப்டன் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். இதற்கு முன்னர் மூன்று வடிவிலும் கேப்டனாக செயல்பட்ட கோலி மற்றும் தோனி ஆகிய இருவர் கூட இந்த சாதனையைப் படைத்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.