தொடர்புடைய செய்திகள்
- கடின உழைப்புக்குப் பலன் கிடைத்தே தீரும்… காயத்தில் இருந்து மீண்ட புகைப்படங்களை பகிர்ந்த ஹர்திக்!
- கோலியை நான் கேப்டன் பதவியில் இருந்து போக சொன்னேனா?… மீண்டும் ஒருமுறை விளக்கமளித்த கங்குலி!
- எங்க ஊருக்கு வந்து fun பண்ணுங்க… இந்திய அணிக்கு அழைப்பு விடுத்த மாலத்தீவு!
- கம்பீர் இடத்தில் டிராவிட் இல்லை… ஆலோசகர் பொறுப்புக்கு வெளிநாட்டு வீரரை தேர்வு செய்த KKR?
- ஹர்திக் பாண்ட்யாவை அதை செய்ய கட்டாயப்படுத்த வேண்டும்- சுனில் கவாஸ்கர் கருத்து!
விராட்டும் ரோஹித்தும் ஈடு செய்ய முடியாதவர்கள்… முன்னாள் கேப்டன் கருத்து!
17 ஆண்டுகளுக்குப் பிறகு டி 20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்று சாதனை படைத்துள்ளது. உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் இந்திய அணி தென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தி பரபரப்பான போட்டியின் முடிவில் இரண்டாவது முறையாக சாம்பியன் ஆனது.
இந்த கோப்பையை வென்றதன் மூலம் விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா ஆகிய இருவரும் 20-20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்து விட்டனர். இளைய தலைமுறையினருக்கு வழிவிடும் விதமாக இந்த முடிவை அவர்கள் எடுத்துள்ளனர்.
இந்நிலையில் அவர்கள் இடத்தை யார் நிரப்பப் போகிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து பேசியுள்ள முன்னாள் இந்திய கேப்டன் கபில் தேவ் “ரோஹித் மற்றும் விராட் கோலி இல்லாதது டி 20 கிரிக்கெட்டுக்கு பாதகமானதுதான். அவர்கள் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. எப்படி ஒரு நாள் கிரிக்கெட்டில் சச்சின் மற்றும் தோனியின் இடத்தை நிரப்ப முடியாதோ அதுபோல ரோஹித் மற்றும் கோலியும்” என்க கூறியுள்ளார்.