தொடர்புடைய செய்திகள்
- ரஜினி குறித்து சீமான் கூறிய முட்டாள்தனமான கருத்து: அரசியல் விமர்சகர்கள் காட்டம்
- எகிறும் எதிர்ப்பார்ப்பு: என்ன செய்யப்போகிறார் கோலி??
- முட்டாள்தனம் செய்யவிருந்த கோலி; தடுத்த சாஸ்திரி: வைரல் வீடியோ!!
- தோனியை மட்டம்தட்டி ஆட்டம் ஆடும் கோலி, ரவி சாஸ்திரி??
- மூன்றே மாதத்தில், கோடிக்கும் மேல் சம்பளம்: ரவி சாஸ்திரி கலக்கல்!!
விமர்சகர்களை கிழித்தெடுத்த ரவி சாஸ்திரி!
இந்தியா அணி தோல்வியடையும் போது விமர்சிப்பவர்கள் தற்போது எங்கே போனார்கள் என இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய இந்திய அனி டெஸ்ட் தொடரில் 2-1 என்ற புள்ளி கணக்கில் தோல்வி அடைந்தது. இதற்கு விமர்சகர்கள் அணியின் தேர்வு சரியில்லை என விமர்சித்தனர். அதைத்தொடர்ந்து இந்திய அணி ஒருநாள் தொடரை 5-1 என்ற புள்ளி கணக்கிலும், டி20 தொடரை 2-1 என்ற புள்ளி கணக்கிலும் வெற்றி பெற்று சாதனை படைத்தது.
இது குறித்து ரவி சாஸ்திரி கூறியதாவது:-
விமர்சகர்களிடம் இருக்கும் மிகப்பெரிய பிரச்சனையே இதுதான். வெற்றிப்பெற்றால் எதிர் அணி சரியாக விலையாடவில்லை. இலங்கை அணியுடன் விளையாடி வெற்றி பெற்றபோது இலங்கை அணி பலவீனமாக இருந்ததது. தென்னாப்பிரிக்கா அணியுடன் வெற்றி பெற்றபோது, அவர்கள் சரியான பார்மில் இல்லை என்றெல்லாம் கூறினார்கள். அணியை அதன் போக்கில் விடுவதே நல்லது என்பதை மறக்க வேண்டாம் என்று கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்