தொடர்புடைய செய்திகள்
- இன்று உலகக் கோப்பையில் முதல் போட்டியை விளையாடும் இந்தியா… ப்ளேயிங் லெவனில் யார் யாருக்கு இடம்?
- ஆஸ்திரேலியா மட்டும் இறுதிப் போட்டிக்கு வரக் கூடாது… இந்திய முன்னாள் வீரர் யுவ்ராஜ் சிங் சொல்லும் காரணம்!
- என்ன ஸ்கூல் பசங்க மாதிரி விளையாடுறாங்க… சொதப்பலாக நடந்த இலங்கை vs தென்னாப்பிரிக்கா போட்டி!
- ‘கோலி அந்த இடத்தில் இறங்கவேண்டும்… இல்லையேல் அணியிலேயே இருக்க வேண்டாம்’ – ஆஸி அணி முன்னாள் வீரர் கருத்து!
- என்ன சொந்த நாட்டு மக்களே வந்து பாக்கல… வெஸ்ட் இண்டீஸ் போட்டிக்கு நடந்த சோகம்!
“இதுதான் எனது கடைசி தொடர்… ஏன் மீண்டும் விண்ணப்பிக்கவில்லை?” – ராகுல் டிராவிட் பதில்!
இந்திய அணியின் பயிற்சியாளராக இருக்கும் ராகுல் டிராவிட், நடந்து வரும் டி 20 உலகக் கோப்பை தொடரோடு அந்த பதவியிலிருந்து விலகவுள்ளார். ஏற்கனவே அவரது பதவிக்காலம் முடிந்த பின்னரும் நீட்டிக்கபட்டுள்ளது.
இதனால் இந்திய அணிக்கு புதிய பயிற்சியாளரை தேடும் பணியில் பிசிசிஐ இறங்கியுள்ளது. இதில் இந்திய அணியின் முன்னாள் வீரர் கம்பீர் முன்னணியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. விரைவில் அது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் ராகுல் டிராவிட்டின் கடைசி தொடராக டி 20 உலகக் கோப்பை தொடர் அமைந்துள்ளது. இந்த தொடர் பற்றி பேசியுள்ள டிராவிட் “என் பயிற்சியில் இந்திய அணி ஐசிசி தொடர்களில் மிகச்சிறப்பாக விளையாடி வருகிறது. ஆனால் நாங்கள் நாக் அவுட் போட்டிகளில் வெற்றி பெறவில்லை. ஆனால் அதைப் பற்றி இப்போது நாங்கள் யோசிக்கவில்லை. இந்திய அணிக்கு பயிற்சியாளராக இருந்த பயணத்தை இனிதானதாக அமைந்தது. ஆனால் சில காரணங்களால் என்னால் அதைத் தொடரமுடியவில்லை. இந்த முறை தொடரை வெல்லும் அணியை நாங்கள் பெற்றுள்ளோம்” எனக் கூறியுள்ளார்.