வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 13 மே 2021 (11:16 IST)

மீண்டும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துடன் மோதும் பீட்டர்சன்… இந்த முறை என்ன சொன்னார் தெரியுமா?

இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துக்கும் கெவின் பீட்டர்சன்னுக்கும் இடையே எப்போதும் வாக்குவாதங்கள் எழுந்தவண்ணமே இருக்கும்.

ஐபிஎல் போட்டியில் விளையாடும் வீரர்கள் மற்றும் அணி நிர்வாகத்தினருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதை அடுத்து ஐபிஎல் போட்டிகள் காலவரையறையின்றி தள்ளி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் வீரர்கள் எப்போது அவர்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் ஐபிஎல் தொடர் பாதியிலேயே நிறுத்தப்பட்டதால் பிசிசிஐக்கு 2000 கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ஒளிபரப்பு மூலம் வரும் விளம்பர வருமானம் உள்ளிட்டவைகளை இப்போது பிசிசிஐ இழந்துள்ளது.

இந்நிலையில் மீண்டும் ஐபிஎல் தொடரை எப்போது நடத்துவது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இங்கி கிரிக்கெட் வாரிய இயக்குனர் ஆஷ்லே கில்ஸ் ‘எஞ்சிய ஐபிஎல் போட்டிகளில் எங்கள் வீரர்கள் விளையாடுவது சந்தேகம்தான். ஏனென்றால் திட்டமிட்ட சர்வதேச தொடர்களில் அவர்களின் பங்களிப்பு தேவை. அப்படி அதில் பாதிப்பு இல்லை எனில் ஐபிஎல் தொடரில் விளையாடுவார்கள்’ எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில் இதுபற்றி பேசியுள்ள இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் ‘இங்கிலாந்து வீரர்களை ஐபிஎல் போட்டிகளில் விளையாட விடாமல் தடுக்க வாரியம் எனன் செய்யப்போகிறது என்பதைப் பார்க்க ஆர்வமாக இருக்கிறேன். நான் இங்கிலாந்து அணிக்கு எதிராக நின்றபோது என்னுடன் யாருமில்லை, தனியாக இருந்தேன்.  ஆனால் இப்போதுள்ள வீரர்கள் ஒன்றாக சேர்ந்து செயல்பட்டால் ஐபிஎல் போட்டிகளில் விளையாடலாம்’ எனக் கூறியுள்ளார். பீட்டர்சன்னின் இந்த கருத்து வீரர்களை வாரியத்துக்கு எதிராக திருப்பிவிடும் விதமாக இருப்பதாக பலரும்  கருத்து தெரிவித்து வருகின்றனர்.