தொடர்புடைய செய்திகள்
- தென்னாப்பிரிக்காவை வென்று இறுதிப் போட்டிக்கு சென்ற நியுசிலாந்து!
- டாஸ் வென்ற நியுசிலாந்து எடுத்த முடிவு... இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் என்ன?
- அந்த வீரரை உள்ளேக் கொண்டுவருவது சம்மந்தமாக ரோஹித்துக்கும் கம்பீருக்கும் இடையே விவாதம்!
- இந்தியாவோடு அரையிறுதியில் விளையாடப் போகும் அணி எது?
- ஆஸ்திரேலியா& தென்னாப்பிரிக்கா ஆகிய இரு அணிகளும் துபாய்க்குப் பயணம்…ஏன் தெரியுமா?
பந்தில் எச்சிலைத் தடவ அனுமதிக்க வேண்டும்… ஐசிசிக்கு முகமது ஷமி கோரிக்கை!
கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக்கும் மேலாக முழங்கால் காயத்தினால் அவதிப்பட்டு வந்த ஷமி சமீபத்தில் இந்திய அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டார். இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரில் சிறப்பாக பங்களிப்பு செய்த அவர் சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் முதல் போட்டியிலேயே பங்களாதேஷ் அணிக்கு எதிராக 5 விக்கெட்களை வீழ்த்தி அசத்தியுள்ளார்.
இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 200 விக்கெட்களை வீழ்த்திய இந்திய பவுலர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். பும்ரா இல்லாத நிலையில் இந்திய அணியின் பவுலிங் யூனிட்டை அவர் வழிநடத்தி வருகிறார். இந்நிலையில் அவர் ஐசிசிக்கு ஒரு கோரிக்கையை வைத்துள்ளார்.
அதில் “பந்தில் எச்சில் தடவ அனுமதி இல்லாததால் பவுலர்களால் ரிவர்ஸ் ஸ்விங்க் செய்ய முடியவில்லை. ஐசிசி அதற்கு அனுமதி அளித்தால் கண்டிப்பாக போட்டி விறுவிறுப்பானதாக மாறும்” எனக் கூறியுள்ளார்.