தொடர்புடைய செய்திகள்
- ரிஷப் பண்ட்டுக்கு நான் போட்டியா?... கே எல் ராகுல் அளித்த பதில்!
- நியுசிலாந்துக்கு எதிரான நாளையப் போட்டியில் ரிஷப் பண்ட்டுக்கு வாய்ப்பு!
- இந்திய அணிக்குக் கேப்டன் ஆகிறாரா ஷுப்மன் கில்?... ரோஹித் ஷர்மாவுக்கு என்ன பிரச்சனை?
- நான் பயிற்சியின் போது கூட அவரை எதிர்கொள்ள விரும்பமாட்டேன்… இந்திய பவுலர் குறித்து கே எல் ராகுல் கருத்து!
- அப்ராரின் செயல் அநாவசியமானது.. கண்டித்த முன்னாள் வீரர்!
இன்றைய போட்டியில் ஷமியும் ஆப்செண்ட்டா?... களமிறங்கப் போகும் இளம் பவுலர்!
இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி லீக் போட்டி இன்று நடக்கிறது. இரு அணிகளும் ஏற்கனவே அரையிறுதி சுற்றுக்குத் தகுதி பெற்றுவிட்டதால் இந்த போட்டியின் முடிவு சாம்பியன்ஸ் கோப்பைக்கான அரையிறுதி தேர்வில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்பதால் இந்த போட்டிக்கு பெரிய அளவில் எதிர்பார்ப்பு இல்லை.
இந்நிலையில் இந்த போட்டியில் ரோஹித் ஷர்மா தசைப் பிடிப்புக் காரணமாக விளையாட மாட்டார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முகமது ஷமியும் விளையாட மாட்டார் என சொல்லப்படுகிறது.
அவருக்குப் பதில் இளம் பந்துவீச்சாளரான அர்ஷ்தீப் சிங் களமிறங்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. இன்றைய போட்டியில் ரிஷப் பண்ட் ரோஹித் ஷர்மாவுக்குப் பதில் இடம்பெற, ஷுப்மன் கில் தலைவராக அணியை வழிநடத்துவார் என சொல்லப்படுகிறது.