தொடர்புடைய செய்திகள்
- முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரான நோவா ஸ்மார்ட்போன்.. ஜூலை 5ல் ரிலீஸ். என்னென்ன சிறப்புகள்?
- இந்திய எல்லையில் 17 வயது இளைஞர், 15 வயது சிறுமி பிணம்.. பாகிஸ்தான் சிம்கார்டு, அடையாள அட்டை..!
- இந்திய அணி பும்ராவையே அதிகம் சார்ந்துள்ளது… அனுபவம் வாய்ந்த பந்துவீச்சாளர்கள் தேவை- அசாருதீன் கருத்து!
- அகமதாபாத் விமான விபத்து திட்டமிட்ட நாசவேலையா? ப்ளாக் பாக்ஸில் இருந்தது என்ன? - ஒன்றிய அமைச்சர் பரபரப்பு தகவல்!
- இங்கிலாந்து தொடர் முழுவதும் தோல்வி அடைந்தாலும்… கில்லுக்கு 3 ஆண்டுகள் வாய்ப்பளிக்க வேண்டும்- ரவி சாஸ்திரி கருத்து!
இரண்டாவது டெஸ்ட் போட்டி… இங்கிலாந்து அணிக்கு ஆலோசகராக இணைந்த முன்னாள் வீரர்!
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடக்கவுள்ளது. ஹெட்டிங்லேவில் நடந்த முதல் போட்டியில் அபாரமாக விளையாடி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி அதே ப்ளேயிங் லெவனில் இந்த போட்டியிலும் விளையாடவுள்ளது.
இந்திய அணியில் இந்த போட்டிக்கு சில மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குல்தீப் யாதவ் அணிக்குள் கொண்டுவரப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல பும்ரா விளையாடுவாரா என்பதும் சந்தேகம்தான்.
இந்நிலையில் இந்த போட்டியில் இங்கிலாந்து அணிக்கு பயிற்சிக்குழு ஆலோசகராக அந்த அணியின் முன்னாள் வீரர் மொயின் அலி இணைந்துள்ளார். சமீபத்தில் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற அவர் இந்தியாவுக்கு எதிராக நிறைய போட்டிகளில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது,