தொடர்புடைய செய்திகள்
- கோலி, ராகுல் அபார அரைசதம்… பங்களாதேஷுக்கு இந்திய நிர்ணயித்த இமாலய இலக்கு!
- பிரபல ஓடிடியில் ரிலீஸ் ஆகும் சிவகார்த்திகேயனின் ப்ரின்ஸ் திரைப்படம்.. எப்போ?
- டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட்: அதிக ரன்கள் அடித்த வீரர்களில் கோலி முதலிடம்!
- அதிரடி அரைசதம்: விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த கே.எல்.ராகுல்!
- நெதர்லாந்து வெற்றியால் தப்பித்த இந்தியா: ஜிம்பாவே பரிதாப தோல்வி
இந்திய பவுலர்களுக்கு தண்ணி காட்டும் லிட்டன் தாஸ்… 21 பந்துகளில் அரைசதம்!
பங்க்ளாதேஷ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் லிட்டன் தாஸ் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்து வருகிறார்.
நடைபெற்று வரும் இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் வங்கதேச அணி அதிரடியான தொடக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
முதலில் ஆடிய இந்திய அணி கே எல் ராகுல், கோலி ஆகியோரின் சிறப்பான அரைசதம் மூலமாக 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்களை இழந்து 184 ரன்கள் சேர்த்துள்ளது. இதன் மூலம் பங்களாதேஷுக்கு இந்தியா ஒரு வலுவான இலக்கை நிர்ணயித்துள்ளது.
இதையடுத்து இப்போது பங்களாதேஷ் அணி விளையாடி வருகிறது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் லிட்டன் தாஸ் அதிரடியாக விளையாடி 21 பந்துகளில் அரைசதம் அடித்தார். இந்த உலகக்கோப்பை தொடரின் அதிவேகமாக அடிக்கப்பட்ட இரண்டாவது அரைசதம் இது வாகும்.
பங்களாதேஷ் அணி பவர்ப்ளே முடிவில் 6 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 60 ரன்களை சேர்த்துள்ளது. லிட்டன் தாஸ் 24 பந்துகளில் 56 ரன்கள் சேர்த்து இந்திய அணிக்கு பயத்தைக் காட்டி வருகிறார்.
அடுத்த கட்டுரையில்