தொடர்புடைய செய்திகள்
- இரண்டு முக்கிய பவுலர்களுக்கு காயம்… பாகிஸ்தான் அணிக்கு பெரும் பின்னடைவு!
- இன்றைய சூப்பர் 4 போட்டி.. இந்தியா - இலங்கை மோதல்.. இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவது யார்?
- “எங்க தோல்விக்கு காரணம் கோலி, ராகுல் இல்ல… இவங்கதான்” பாக் கேப்டன் பாபர் ஆசாம் கருத்து!
- ஒரே ஸ்பெல்லில் பாகிஸ்தான் அணியின் பேட்டிங்கை நிலைகுலைய வைத்த குல்தீப் யாதவ்!
- கம்பீரின் விமர்சனத்தைப் பொய்யாக்கிய கே எல் ராகுல்… இப்ப என்ன சொல்றாரு பாருங்க?
நான் அடித்த அந்த ஷாட் மிக மோசமாக இருந்தது… விராட் கோலி கருத்து!
நேற்றைய பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சதமடித்து இந்தியாவின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த கோலி, ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். அதன் பின்னர் பேசிய அவர் “நேர்காணலை சுருக்கமாக முடியுங்கள் என நான் வேண்டுகோள் வைக்கிறேன். நான் மிகவும் சோர்வாக இருக்கிறேன். நாளை மறுபடியும் இலங்கையோடு விளையாட வேண்டும். அணிக்கு பல்வேறு வழிகளில் உதவ நான் எப்போதும் தயாராக இருக்கிறேன். இன்று, ராகுல் ஒரு சிறந்த தொடக்கத்தைப் பெற்றார் மற்றும் எனது வேலை சிங்கிள்ஸ்கள் அடுத்து பேட்டிங்கை சுழற்றுவது மட்டுமே. எளிதாக சிங்கிள்ஸ்களை எடுக்க முயற்சிப்பதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.
நான் ரிவர்ஸ் ராம்ப் போன்ற ஷாட்களை விளையாடுவதில்லை. நான் அந்த ஷாட்டை விளையாடியது மிகவும் மோசமாக இருந்தது. நான் மற்றும் KL இருவரும் மரபான கிரிக்கெட் வீரர்கள், நாங்கள் ஆடம்பரமான ஷாட்களை முயற்சிக்க மாட்டோம், ஆனால் நல்ல கிரிக்கெட் ஷாட்கள் மூலம் நாங்கள் நிறைய ரன்கள் சேர்க்க முடியும். கே எல் ராகுல் மீண்டும் ஒருநாள் கிரிக்கெட்டுக்கு வந்ததில் மிக்க மகிழ்ச்சி.
அதிர்ஷ்டவசமாக, நாங்கள் டெஸ்ட் வீரர்கள், நான் 100 டெஸ்ட்களுக்கு மேல் விளையாடிவிட்டேன், அதனால் மீண்டும் வந்து அடுத்த நாள் எப்படி விளையாடுவது என்பது எனக்குத் தெரியும்.” எனக் கூறியுள்ளார்.