வெள்ளி, 29 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth

இங்கிலாந்து கிளம்பும் கோலி… உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் கவனம்!

ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் இந்த வாரத்தில் ப்ளே ஆஃப் மற்றும் பைனல் போட்டிகள் நடக்க உள்ளன. இந்நிலையில் ப்ளே ஆஃப் விளையாடாத அணியில் உள்ள வீரர்கள் இங்கிலாந்தில் ஆஸி அணிக்கு எதிரான டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்காக இன்றே இங்கிலாந்து கிளம்புகின்றனர்.

அந்த வகையில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான அணியில் இடம்பெற்றுள்ள கோலி, சிராஜ், ஷர்துல் தாக்கூர், அஸ்வின், உமேஷ் யாதவ், உனட்கட் மற்றும் அக்ஸர் படேல் ஆகியோர் இன்றே இங்கிலாந்து கிளம்புகின்றனர்.  அங்கு சென்று சில நாட்கள் ஓய்வெடுத்த பின்னர் அவர்கள் பயிற்சியில் ஈடுபடுவார்கள் என்று தெரிகிறது. மற்ற வீரர்கள் ஐபிஎல் தொடரை முடித்ததும் கிளம்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.