தொடர்புடைய செய்திகள்
- நிதிஷ்குமார் & வாஷிங்டன் சுந்தரின் பொறுப்பான ஆட்டத்தால் ஃபாலோ ஆனைத் தவிர்த்த இந்தியா.. !
- ஜெயிலர் 2 வுக்குப் பிறகு பேன் இந்தியா நடிகரோடு இணையும் நெல்சன்!
- பும்ராவின் விக்கெட்களை விட ரோஹித் ஷர்மாவின் ரன்கள் கம்மி.. கவலையளிக்கும் ஃபார்ம்!
- நிதீஷ்குமார் ரெட்டி அதிரடி ஆட்டம்.. ஃபாலோ ஆனைத் தவிர்க்குமா இந்தியா?
- அவுட் ஆகி வெளியேறிய போது கிண்டல் செய்த ஆஸி ரசிகர்கள்… திரும்பி வந்து முறைத்த கோலி!
முட்டாள்தனமான ஷாட்.. ரிஷப் பண்ட்டை கடுமையாக சாடிய சுனில் கவாஸ்கர்!
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நான்காவது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 474 ரன்கள் சேர்த்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. ஸ்டீவ் ஸ்மித் அபாரமாக ஆடி சதமடித்தார். இந்தியா சார்பில் பும்ரா நான்கு விக்கெட்களையும் ஜடேஜா மூன்று விக்கெட்களையும் அதிகபட்சமாக வீழ்த்தினர்.
இதையடுத்து ஆடிய இந்திய அணி நேற்று இரண்டாம் நாள் முடிவில் 164 ரன்கள் சேர்த்து 5 விக்கெட்களை இழந்திருந்தது. இந்தியா சார்பில் ஜெய்ஸ்வால் 82 ரன்களும் கோலி 36 ரன்களும் அதிகபட்சமாக சேர்த்திருந்தனர். அதையடுத்து இன்று போட்டி தொடங்கிய சில நிமிடங்களிலேயே தேவையற்ற ஸ்கூப் ஷாட் ஒன்றை ஆடி தனது விக்கெட்டை இழந்தார்.
இதுபற்றி பேசியுள்ள வர்ணனையாளர் சுனில் கவாஸ்கர் “முட்டாள் தனமானது. இது ஒன்றும் தன்னுடைய இயற்கையான ஆட்டத்தை ஆடுவது கிடையாது. இது முட்டாளதனமான ஷாட். இந்த ஷாட்டை ஆடிவிட்டு நீங்கள் ட்ரஸ்ஸிங் ரூமுக்கு செல்லக் கூடாது” என கடுமையாக சாடியுள்ளார். தற்போது இந்திய அணி 284 ரன்கள் சேர்த்து 7 விக்கெட்களை இழந்து ஆடி வருகிறது.