1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : திங்கள், 10 அக்டோபர் 2022 (09:40 IST)

“அப்படி ஒரு பிரச்சன இருக்குண்ணா ஐபிஎல் விளையாடாதீங்க…” கபில் தேவ் கருத்து!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் தன் மனதில் வெளிப்படையாக சொல்லும் தைரியமுடையவர்.

இந்திய அணிக்காக 1983 ஆம் ஆண்டு உலகக்கோப்பை பெற்றுத்தந்த பெருமைக்குரியவர் முன்னாள் கேப்டன் கபில்தேவ். அதுமட்டுமில்லாமல் இதுவரை இந்தியா அணியில் இடம்பெற்ற மிகச்சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவர். சில காலம் பிசிசிஐ உடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தடை செய்யப்பட்டு பின்னர் சேர்த்துக்கொள்ளப்பட்டவர்.

இந்நிலையில் இப்போது அவர் வீரர்கள் ஐபிஎல் விளையாடுவதால் அதிக அழுத்தம் எதிர்கொள்ள நேர்வதாக சொல்லப்படுவது குறித்து “அதிக அழுத்தத்தை உணர்ந்தால் ஐபிஎல் தொடரில் விளையாடாதீர்கள். உங்களுக்கு ஒரு விஷயம் பிடித்திருந்தால் மன அழுத்தம் எல்லாம் வராது.  எனக்கு இந்த அமெரிக்க வார்த்தையெல்லாம் தெரியாது.” எனக் கூறியுள்ளார்.