தொடர்புடைய செய்திகள்
- இந்திய வீரர்களிடம் இருந்து பாடம் கற்று கொள்ளுங்கள்: மைக்கேல் கிளார்க் அட்வைஸ்
- இந்தியாவின் யூபிஐ, சிங்கப்பூரின் பேநெள இணைப்பு; இரு நாட்டு மக்கள் மகிழ்ச்சி..!
- அணிக்குள் திரும்பும் இரண்டு முக்கிய வீரர்கள்… ஆஸி அணிக்கு திருப்புமுனையாக அமையுமா?
- ஆஸிக்கு திரும்பும் பேட் கம்மின்ஸ்… முக்கிய வீரர் தொடரிலிருந்து விலகல்- அடுத்தடுத்த அதிர்ச்சி!
- உலகக்கோப்பை மகளிர் டி20: மழையால் அரையிறுதிக்கு தகுதி பெற்ற இந்தியா..!
மூன்றாவது டெஸ்ட்டில் கே எல் ராகுலுக்கு ஓய்வா?.. இளம் வீரருக்கு வாய்ப்பு!
ஆஸி அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இருந்து கே எல் ராகுல் நீக்கப்படலாம் என சொல்லப்படுகிறது.
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரும் துணைக் கேப்டனுமான கே எல் ராகுக் மீது கடும் விமர்சனங்கள் எழும் அளவுக்கு அவரின் பார்ம் உள்ளது. கிட்டத்தட்ட 47 டெஸ்ட் போட்டிகள் விளையாடியுள்ள அவர் சராசரியாக 33 மட்டுமே வைத்துள்ளார்.
இந்திய தொடக்க ஆட்டக்காரர்களில் இந்தளவுக்குக் குறைவான சராசரி யாருக்கும் இல்லை. இந்நிலையில் முன்னாள் வீரர்கள் சுப்மன் கில் போன்ற திறமையான வீரர்கள் இருக்கும் நிலையில் கே எல் ராகுலுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் அளிப்பது ஏற்புடையதில்லை எனக் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் கடும் விமர்சனங்கள் எழுந்ததை அடுத்து மூன்றாம் டெஸ்ட்டில் இருந்து கே எல் ராகுல் நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக இளம் வீரர் சுப்மன் கில் சேர்க்கப்படலாம் என சொல்லப்படுகிறது.