1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. K L rahul innings should be praised said adam gilchrist

ராகுல் பற்றி எல்லோரும் பேசி இருக்கணும்.. ஆனால்? – ஆஸி வீரர் கருத்து!

ஜெய்ஸ்வால்
பெர்த் மைதானத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஜெய்ஸ்வால் மற்றும் கே எல் ராகுல் ஆகியோர் அமைத்த சிறப்பான தொடக்கம் ஒரு காரணமாக அமைந்தது.

பேட்ஸ்மேன்களுக்கு பெர்த் ஆடுகளம் உகந்ததல்ல. இரு அணிகளுமே முதல் இன்னிங்ஸில் தடுமாறி நிலைகுலைந்ததை நாம் பார்த்தோம். ஆனாலும் இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா சுதாரித்தது. இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணியின் பேட்டிங் வரிசையை வழிநடத்தி சென்றார் ஜெய்ஸ்வால் என்றே சொல்லலாம். அதனால் அவர் குறித்த பாராட்டுகள் கிரிக்கெட் உலகில் நிரம்பி வழிந்தன.

ஆனால் ஆஸி அணியின் முன்னாள் விக்கெட் கீப்பரான ஆடம் கில்கிறிஸ்ட் இது குறித்து பேசும்போது “எங்கு பார்த்தாலும் ஜெய்ஸ்வால் குறித்த பாராட்டுரைகளேக் காணப்படுகின்றன. ஆனால் கே எல் ராகுல்தான் பாராட்டுக்குரியவர். அவர் ஆடியது சிறந்த இன்னிங்ஸ். அதுதான் இந்தியாவை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆதிக்கம் செலுத்த உதவியது.” எனக் கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
தோனியிடம் பேசியே பத்து ஆண்டுகள் ஆகிறது… ஹர்பஜன் சிங் பகிர்ந்த தகவல்!