1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வியாழன், 30 நவம்பர் 2023 (07:47 IST)

கோலி, சச்சினை விட இவர்தான் சிறந்த பேட்ஸ்மேன்… பாகிஸ்தான் வீரர் சொல்லும் காரணம்!

சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராட் கோலி ஆகிய இருவரும் வெவ்வேறு காலகட்டத்தை சேர்ந்த இரு லெஜண்ட்கள் என்றாலும், இருவரையும் ஒப்பிடும் போக்கு அதிகமாகவே நடந்து வருகிறது. அந்த வகையில் இப்போது பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜுனைத் கான் இருவரையும் விட சிறந்த பேட்ஸ்மேன் ரோஹித் ஷர்மாதான் என்று கூறியுள்ளார்.

இது சம்மந்தமாக அவர் அளித்த ஒரு நேர்காணலில் ‘சச்சின் மற்றும் கோலி ஆகியோரில் சிறந்த பேட்ஸ்மேன் யார்?” என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அப்போது பதிலளித்த ஜூனைத் கான் “நான் ரோஹித் ஷர்மாவைதான் சொல்வேன். ஏனென்றால் அவர் பேட்டிங் செய்யும் அணுகுமுறை.  விராட் கோலி பெரிய வீரர். சச்சின் வேறொரு காலத்தில் விளையாடிக் கொண்டிருந்தார். இப்போது அவர் ஆடியிருந்தால் 100 சதங்களுக்கு மேல் அடித்திருப்பார்.

எல்லோரும் ரோஹித்தை ஹிட்மேன் என அழைக்கிறார்கள்.  அதற்குக் காரணம் அவர் மூன்று முறை ஒருநாள் போட்டிகளில் 200 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார். அதனால்தான் அவரை நான் சிறந்த பேட்ஸ்மேன் என சொல்கிறேன்” எனக் கூறியுள்ளார்.