தொடர்புடைய செய்திகள்
- தொடரும் ஞாபக மறதி.. ரோஹித் ஷர்மாவைக் கிண்டல் செய்யும் ரசிகர்கள்!
- சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான கனவு அணியை அறிவித்த ஐசிசி… இந்திய வீரர்களில் யாருக்கு இடம்?
- சாம்பியன்ஷிப் இறுதி போட்டி.. ரூ. 5000 கோடிக்கு சூதாட்டம்.. அதிர்ச்சி தகவல்..!
- தமிழகத்தின் 2 நகரங்களுக்கு கூடுதல் விமான சேவை: விமான போக்குவரத்து அமைச்சகம்
- இந்தியாவில் எந்த மாநிலத்திலும் மும்மொழி கொள்கை இல்லை: ப சிதம்பரம்
தேவையில்லாத வதந்தி வேண்டாம்… கிசுகிசுக்களுக்கு பதில் சொன்ன ஜடேஜா!
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையே நேற்று முன் தினம் நடந்த சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில், இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. இதன் மூலம் 12 ஆண்டுகள் கழித்து சாம்பியன்ஸ் கோப்பை பட்டத்தை இந்திய அணி வென்றது. இதன் மூலம் மூன்று முறை சாம்பியன்ஸ் கோப்பை பட்டத்தை வென்ற முதல் அணி என்ற பெருமையைப் பெற்றது இந்திய அணி.
இந்த தொடர் முடிந்ததும் ரோஹித் ஷர்மா ஓய்வறிவிப்பார் என்று தகவல்கள் பரவின. ஆனால் அவர் பத்திரிக்கையாளர் சந்திப்பில் நான் இப்போதைக்கு இந்த பார்மட்டில் இருந்து ஓய்வு பெறப் போவதில்லை எனக் கூறி விளக்கமளித்தார். அதையடுத்து ஜடேஜா ஓய்வை அறிவிக்கப் போகிறார் என்று சமூகவலைதளங்களில் தகவல் பரவியது.
அதையடுத்து அவர் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் “தேவையில்லாத வதந்திகள் வேண்டாம்” என ஸ்டேட்டஸ் வைத்து பதிலளித்துள்ளார். ஆனாலும் ரோஹித்தும், ஜடேஜாவும் இன்னும் எத்தனை ஆண்டுகள் ஒருநாள் போட்டிகளில் விளையாடுவார்கள் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
அடுத்த கட்டுரையில்