1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Irfan pathan talked about hardhik pandya captaincy issue

“ஹர்திக்கைக் கேப்டனாக்கினால் இந்த சிக்கல் இருக்கு” – முன்னாள் வீரர் கருத்து!

இந்தியா
இந்நிலையில் தற்போது இந்திய அணி ஜனவரி மாதம் இலங்கைக்கு எதிராக விளையாடும் டி 20 தொடரில் இந்திய அணிக்குக் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அணியில் மூத்த வீரர்கள் பலருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் டி 20 கிரிக்கெட்டில் மூத்த வீரர்கள் இடம்பெறாதது நிரந்தரமானதா அல்லது இலங்கை தொடருக்கு மட்டுமா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இது சம்மந்தமாக பரவி வரும் தகவல்களின் படி இனிமேல் டி 20 அணிக்கு ஹர்திக்தான் கேப்டனாக செயல்படுவார் என்று சொல்லப்படுகிறது. மேலும் ஒருநாள் அணிக்கு 2023 ஆம் ஆண்டு உலகக்கோப்பை வரை மட்டுமே ரோஹித் ஷர்மா கேப்டனாக செயல்படுவார் என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில் ஹர்திக் பாண்ட்யாவை நிரந்தர கேப்டனாக்குவது குறித்து முன்னாள் வீரர் இர்பான் பதான் முக்கியமானக் கருத்து ஒன்றை பேசியுள்ளார். அதில் "ஹர்திக் பாண்ட்யாவின் கேப்டன்சி, அது ஐபிஎல்லில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக இருந்தாலும் சரி, இந்தியாவுக்காக இருந்தாலும் சரி மிகவும் சிறப்பாக இருந்தது என்று நான் உணர்ந்தேன். அவர் மிகவும் சுறுசுறுப்பாகக் காணப்பட்டார்.

​​​​அவரது அணுகுமுறையால் நான் மிகவும் ஈர்க்கப்பட்டேன், ஆனால் அதனுடன் நீங்கள் அவரை நீண்ட கால (நிரந்தர) கேப்டனாக மாற்றினால், அவரது உடற்தகுதியில் அவர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பதை இந்தியா நினைவில் கொள்ள வேண்டும். நீங்கள் அவரைப் பற்றியோ அல்லது அணி நிர்வாகத்தைப் பற்றியோ பேசினாலும், அது மிகவும் முக்கியமானதாக இருக்கும்," என்று கூறியுள்ளார்.
About Writer
vinoth
அடுத்த கட்டுரையில்
ரோஹித் கேப்டன்சிக்கு இப்போதைக்கு சிக்கல் இல்லை… பிசிசிஐ தரப்பு தகவல்!