இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கிடையில் போர் பதற்ற சூழல் நிலவி வருகிறது. இதன் காரணமாக இரு நாடுகளிலும் இயல்பு வாழ்க்கைப் பாதிப்படையும் சூழல் உருவாகியுள்ளது. இரு நாட்டு எல்லைப் பகுதிகளிலும் உள்ள விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் பாதுகாப்புக் கருதி மக்கள் அதிகம் கூடும் ஐபிஎல் தொடர் தள்ளிவைக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகின. அதை பிசிசிஐ உறுதிப்படுத்தியது. தேதி குறிப்பிடாமல் தள்ளிவைப்பதாக அறிவித்தது. இதற்கிடையில் தற்போது எஞ்சிய ஐபிஎல்...