1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Modified: செவ்வாய், 11 அக்டோபர் 2022 (16:30 IST)

100 ரன்களுக்குள் சுருண்ட தென் ஆப்பிரிக்கா…குல்தீப் யாதவ் அபாரம்!

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் மூன்றாவது ஒருநாள் போட்டி தற்போது டெல்லியில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணிக் கேப்டன் ஷிகார் தவான் பந்துவீச முடிவு செய்தார்.

இதையடுத்து பேட் செய்த தென் ஆப்பிரிக்கா அணிக்கு இந்திய பவுலர்களின் தாக்குதல்  பேரிடியாக அமைந்தது. இந்திய தாக்குதலை எதிர்கொள்ள முடியாத தென் ஆப்பிர்க்க பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

இதனால் அந்த அணி 99 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணி சார்பாக வாஷிங்டன் சுந்தர், மற்றும் சிராஜ் மற்றும் ஷபாஸ் அகமது ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். அதிகபட்சமாக குல்தீப் யாதவ் நான்கு விக்கெட்களைக் கைப்பற்றி அசத்தினர்.  ஒரு நாள் போட்டிகளில் தென் ஆப்பிரிக்க அணி எடுத்த நான்காவது மிகக்குறைந்த ஸ்கோர் ஆகும்.