1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 20 நவம்பர் 2020 (09:47 IST)

உலக கோப்பைக்கு தயாராக அவகாசமில்லை; மகளிர் டி20 போட்டி ஒத்திவைப்பு!

கொரோனா காரணமாக மகளிர் உலக கோப்பை டி20 போட்டிகளை ஒத்திவைப்பதாக ஐசிசி அறிவித்துள்ளது.

ஐசிசியின் மகளிர் உலக கோப்பை டி20 போட்டிகள் 2022ம் ஆண்டு நடத்தப்பட இருந்தது. இந்நிலையில் கொரோனா காரணமாக கடந்த ஒரு ஆண்டு காலமாக பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெறாததால் பல நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளன. இதனால் கிரிக்கெட் வீராங்கனைகள் பயிற்சி மேற்கொள்வதிலும் சிக்கல் எழுந்துள்ளதாக தெரிகிறது.

இதனால் கொரோனா மற்றும் போதிய அவகாசம் அளிக்கும் பொருட்டு மகளிர் உலக கோப்பை டி20 போட்டிகளை 2023ம் ஆண்டிற்கு ஒத்திவைப்பதாய் ஐசிசி தெரிவித்துள்ளது.