1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. How did Dhoni become the captain Harsha Pokhlo Interesting information

தோனி கேப்டன் ஆனது எப்படி? ஹர்ஷா போக்லோ சுவாரஸ்யமான தகவல்

MS Dhoni
தோனியிடம் கேப்டன்ஷி வந்தது பற்றி ஹர்ஷா போக்லோ சுவாரஸ்யமான தகவல் பகிர்ந்துள்ளார்.

இந்திய  கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் தோனி. இவர் மூன்று வகையான போட்டிகளிலும் அணிக்கு சாம்பியன் பட்டம் வென்று கொடுத்த ஒரே கேப்டன் என்ற சாதனை படைத்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தோனி ஓய்வு பெற்றிருந்தாலும், அவர் தொடர்ந்து, ஐபிஎல் தொடரில், சென்னை கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.

இந்த நிலையில், தோனியிடம் கேப்டன்ஷி வந்தது பற்றி ஹர்ஷா போக்லோ சுவாரஸ்யமான தகவல் பகிர்ந்துள்ளார்.

அதில், ‘’2007 -2008 ஆண்டு காலக்கட்டத்தில், அனில் கும்ளேவுக்கு பின் சச்சினிடம் மீண்டும் கேப்டன் பொறுப்பு வழங்க பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது, நான் ஸ்லிப் –ல் நின்று கொண்டுகொண்டிருக்கிறேன்.  என் அருகில் நிற்கும் ஒருவர் கேப்டன் பொறுப்புக்கு தயாராக உள்ளார் என்று கூறியுள்ளார். அதன்பின்னர், கேப்டன் பொறுப்பு தோனியிடம் ஒப்படைக்கப்பட்டது’’ என்று தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்
வந்துட்டேன்னு சொல்லு.. சென்னை வந்ததை இன்ஸ்டாவில் பதிவு செய்த ஜடேஜா..!