தொடர்புடைய செய்திகள்
- தேசியத்தின் பேரை சொல்லி தப்பிக்க பார்க்கிறார்கள்!? – அதானி அறிக்கைக்கு ஹிண்டென்பெர்க் பதில்!
- 239 பந்துகள் வீசியும் ஒரு சிக்ஸர் கூட இல்லை… டி 20 மேட்ச்சா இல்லை டெஸ்ட் போட்டியா?
- ஹிண்டன்பர்க் நிறுவன குற்றச்சாட்டு இந்தியா மீதான தாக்குதல்: அதானி நிறுவனம் அறிக்கை
- சாம்பியன் பட்டம் வென்ற இந்திய ஜூனியர் மகளிர் அணிக்கு ரூ.5 கோடி பரிசு: ஜெய்ஷா அறிவிப்பு!
- 67.48 கோடியை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு!
இது தோனியின் கேப்டன்சி பாணி… நேற்றைய போட்டி பற்றி ஹர்திக் பாண்ட்யா பதில்!
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே இன்று இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்ற நிலையில் இந்த போட்டியில் 100 ரன்கள் என்ற இலக்கை இந்தியா கடைசி பந்து வரை கொண்டு சென்று வெற்றி பெற்றது.
நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 8 விக்கெட் இழப்பிற்கு 99 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து 100 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி கடைசி நேரத்தில் 19.5 வது ஓவரில் 101 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இந்நிலையில் இவ்வளவு பொறுமையாக இலக்கை துரத்தியது ஏன் எனக் கேட்ட போது அதற்கு பாண்ட்யா “இதுபோன்ற மெதுவான மைதானங்களில் விளையாடும் போது வீரர்கள் நிறைய விஷயங்களைக் கற்றுக் கொள்கிறார்கள். மைதானங்களை எப்படி அனுகுகிறார்கள் என்று பார்த்து அதற்கேற்றார்போல வியூகங்கள் வகுக்க முடியும். இது தோனியின் கேப்டன்சி பாணி” எனக் கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்