தொடர்புடைய செய்திகள்
- செஞ்சி கோட்டைக்கு சர்வதேச அங்கீகாரம்?
- 'கிராமங்களில் உள்ளவர்களும் பதக்கங்கள் வெல்ல வேண்டும் என்பதுதான் திராவிட மாடல்'' -அமைச்சர் உதயநிதி
- CAA சட்டத்தால் சிறுபான்மையின மக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதை அதிமுக ஒருபோதும் அனுமதிக்காது- எடப்பாடி பழனிசாமி
- கேலோ- இந்தியா விளையாட்டு போட்டி நிறைவு-! தமிழ்நாடு 2- வது இடம்
- ஊழல் மிகுந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா எந்த இடம் தெரியுமா?
ஒரே ஒரு போட்டிதான் சான்ஸ் கொடுப்பாங்க… சர்பராஸ் கானை எச்சரித்த ஹர்பஜன் சிங்!
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையே ஹைதராபாத்தில் முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி நடைபெற்ற நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்திய அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.
இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டிணத்தில் நடக்க உள்ள நிலையில் இந்திய அணியில் இருந்து காயம் காரணமாக கே எல் ராகுல் மற்றும் ரவிந்தர ஜடேஜா ஆகியோர் விலகியுள்ளனர். அவர்களுகு பதில் சர்பராஸ் கான் மற்றும் சௌரப் குமார் ஆகிய இருவரும் அணியில் இணைந்துள்ளனர்.
முதல் தரக் கிரிக்கெட்டில் 69 ரன்கள் சராசரி வைத்துள்ள சர்பராஸ் கான், கடந்த சில ஆண்டுகளாக ரஞ்சி கோப்பையில் சிறப்பாக விளையாடி வரும் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இந்நிலையில் இப்போது விசாகப்பட்டிணத்தில் நடக்க உள்ள ஒரு போட்டியில் மட்டும்தான் சர்பார்ஸ் கானுக்கு வழங்கப்படும் என ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
அதில் “மூன்றாவது டெஸ்ட்டுக்கு கோலி வந்துவிட்டால், சர்பராஸ் கானை நீக்கிவிடுவார்கள். அதனால் இந்த போட்டியில் அவர் தன்னை சிறப்பாக வெளிப்படுத்திக் கொள்ளவேண்டும். இல்லையென்றால் அவர் இத்தனை ஆண்டுகள் கஷ்டப்பட்டதற்கு பயன் இல்லாமல் போய்விடும்” எனக் கூறியுள்ளார்.