தொடர்புடைய செய்திகள்
- மீண்டும் வெற்றிப்பாதையில் கோலிவுட் திரையுலகம்.. மூன்று படங்கள் தொடர் வெற்றி..!
- இப்படி ஒரு பவுலரா?... மெக்ராத், மலிங்கா வரிசையில் இந்திய வீரரை சேர்த்த ரவிசாஸ்திரி!
- கோலிக்கு இது சரிபடாது… அவர் தன் இடத்தில் இறங்கவேண்டும் –முன்னாள் வீரர் அட்வைஸ்!
- மீண்டும் சொதப்பிய கோலி… ஆமைவேகத்தில் பேட் செய்து வெற்றி பெற்ற இந்தியா!
- காளி வெங்கட்-ரோஷ்னி பிரகாஷ் நடித்துள்ள படம் ’தோனிமா’!
வீரர்கள் இப்படிதான் தேர்வு செய்யப்பட வேண்டும்… யோ யோ டெஸ்ட் வைத்தல்ல – கம்பீர் கருத்து!
இந்திய அணியின் முன்னாள் வீரரான கவுதம் கம்பீர் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் கொல்க்ததா அணிக்கு ஆலோசகராக செயல்பட்டு அந்த அணியை மூன்றாவது முறையாக கோப்பையை வென்று கொடுத்துள்ளார். இதன் மூலம் அவர் இந்திய அணிக்கு பயிற்சியாளராக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
இது குறித்து ஒரு நேர்காணலில் பேசியுள்ள கம்பீர், “இந்திய அணிக்கு பயிற்சி அளிப்பதை நான் பெரிதும் விரும்புகிறேன். அதை விட பெரியது வேறு எதுவுமே இல்லை என நினைக்கிறேன். நான் பயிற்சியாளராக ஆனால் 140 கோடி இந்திய மக்களின் பிரதிநிதியாக இருப்பேன். ” எனப் பேசியுள்ளார். இதன் மூலம் அவர் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
இந்நிலையில் அவர் இந்திய அணியில் வீரர்கள் தேர்வு செய்யப்படும் விதம் குறித்து பேசியுள்ளார். அதில் “வீரர்கள் திறமை, அவர்களின் பேட்டிங் செயல்பாடு மற்றும் பவுலிங் செயல்பாடு ஆகியவற்றை வைத்து மட்டும்தான் தேர்வு செய்யப்படவேண்டும். யோ யோ டெஸ்ட் முடிவுகளை வைத்தல்ல” எனக் கூறியுள்ளார். சமீபகாலமாக இந்திய அணி வீரர்கள் யோ யோ டெஸ்ட் முடிவுகளின் படி தேர்வு செய்யப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.