தொடர்புடைய செய்திகள்
- பங்காளி ஃபைனல்ஸ்ல பாப்போம்.. வரட்டாடாடாங்ங்..! – இணையத்தை கலக்கும் IPL Memes!
- ஜெய்ஸ்வால அதுக்குள்ள ஒருநாள் போட்டிகள்ல எடுக்கக் கூடாது… தினேஷ் கார்த்திக் சொல்லும் காரணம்!
- தோனி உறுதியாக அடுத்த ஐபிஎல்-ல் விளையாடுவார்- சென்னை கிங்ஸ் பவுலிங் பயிற்சியாளர்
- ஐபிஎல் போட்டியில் இருந்து எப்போது ஓய்வு ? தோனியின் பதிலால் ரசிகர்கள் சோகம்
- இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பான்சர் ? புதிய தகவல்
ஜெய்ஸ்வாலை ஒருநாள் உலக்கோப்பையில் சேர்க்கக் கூடாது! – தினேஷ் கார்த்திக் கருத்து!
ஐபிஎல் போட்டிகளில் கலக்கி வரும் ஜெய்ஸ்வாலை ஒருநாள் உலகப்போட்டியில் சேர்ப்பது குறித்து தினேஷ் கார்த்திக் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
நடந்து வரும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடியவர் இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால். ராஜஸ்தான் அணிக்காக சதம், அரைசதங்கள் விளாசி விளையாடிய ஜெய்ஸ்வால் பலரையும் கவர்ந்துள்ளார். பல முன்னாள் கிரிக்கெட் வீரர்களும், கிரிக்கெட் நிபுணர்களும் ஜெய்ஸ்வால், சுப்மன் கில் போன்ற எனெர்ஜியான இளம் வீரர்களை எதிர்வரும் ஒருநாள் உலகக்கோப்பை போட்டியில் இணைத்தால் சிறப்பாக இருக்கும் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஆனால் இதற்கு கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் ஆட்சேபணை தெரிவித்துள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அவர் “ஐபிஎல்லில் சிறப்பாக விளையாடும் ஜெய்ஸ்வாலை ஒருநாள் உலகக்கோப்பை போட்டிகளில் சேர்ப்பது அவசரமான முடிவு. அடுத்த வருடம் நடைபெறும் டி20 உலகக்கோப்பை போட்டியில் அவரை விளையாட வைப்பதே சரியாக இருக்கும்” என தெரிவித்துள்ளார்.
Edit by Prasanth.K
அடுத்த கட்டுரையில்