தொடர்புடைய செய்திகள்
- சிறுமியை கர்ப்பமாக்கிய ராணுவ வீரர்...போலீஸார் வழக்குப் பதிவு
- பயிற்சி விமானிகளுடன் சென்ற விமானம் விபத்து....விமானிகளை தேடும் பணி தீவிரம்
- ''தோனிக்கு அடுதது சென்னை அணிக்கு இவர்தான் கேப்டன்''- சுரேஷ் ரேய்னா நம்பிக்கை
- சேப்பாக்கம் மைதானத்தில் 'முத்தமிழறிஞர் கருணாநிதி ஸ்டேண்டை' திறந்துவைத்த முதல்வர் முக.ஸ்டாலின் !
- பெண்ணை கட்டையால் தாக்கி, நடுரோட்டில் தரதரவென இழுத்துச் சென்ற திருடன்...!பரவலாகும் வீடியோ
தோனி இந்த ஆண்டோட ஓய்வா… ஷேன் வாட்சன் சொன்ன தகவலால் சி எஸ் கே ரசிகர்கள் குஷி!
சிஎஸ்கே அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து ஜடேஜா விலகியதை அடுத்து கடந்த ஆண்டு சி எஸ் கே அணியை இறுதி போட்டிகளில் தோனி வழிநடத்தினார். ஆனால் அப்போதும் அணியால் ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முடியவில்லை.இதனால் ஜடேஜா அதிருப்தியில் இருந்ததாகவும், அவர் சிஎஸ்கே அணியில் இருந்து விலகுவார் என்று கூறப்பட்டது. மேலும் அவரது சமூக வலைத்தளத்தில் சிஎஸ்கே சம்பந்தப்பட்ட பதிவுகள் அனைத்தும் டெலிட் செய்யப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் அவர் இந்த ஆண்டும் சி எஸ் கே அணிக்காகதான் விளையாட உள்ளார். ஆனால் கேப்டனாக தோனியே செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இம்மாத இறுதியில் ஐபிஎல் போட்டிகள் தொடங்க உள்ள நிலையில் சென்னை அணி வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் தோனி பற்றி பேசியுள்ள முன்னாள் சி எஸ் கே வீரர் “தோனி இந்த ஆண்டோடு ஓய்வுபெறுவார் என நான் நினைக்கவில்லை. அந்தளவுக்கு அவர் பிட்டாக இருக்கிறார். அவர் இன்னும் சில ஆண்டுகள் விளையாடலாம்” எனக் கூறியுள்ளார்.